அம்பத்தூர், ஜூலை 18-
புதிய வீடுகள் கட்டுவ தற்கான வரைபட அனு மதிக்கு பணம் செலுத்த 90 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சி பகுதிகளில் புதிதாக வீடு கட்டுவதற்கு, வரைபட அனுமதிக்கு அந்தந்த மாநகராட்சி, நகராட்சிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப் பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்களை மாநக ராட்சிகளில் உதவி பொறி யாளர்கள், நகராட்சிகளில் நகரமைப்பு ஆய்வாளர்கள் ஆய்வு செய்து செயற்பொறி யாளர்களுக்கு அனுப்பு வார்கள். செயற் பொறி யாளர்கள் ஆய்வு செய்து ஆணையாளர்களுக்கு அனுப்புவார்கள்.
அதன்பின்னர் வரைபட அனுமதிக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு 30 நாட்களுக்குள் பணம் கட்ட வேண்டும் என ஆணை வழங்கப்படும். இந்த 30 நாட்களுக்குள் பணம் கட்ட வில்லை என்றால் தானா கவே வரைபட அனுமதிக் கான விண்ணப்பம் நிராகரிக் கப்பட்டு விடும். இதனால் மீண்டும் ஆன்லைனில் விண்ணப்பித்து, மீண்டும் நடைமுறைகள் கடைபிடிக் கப்பட்டு வரைபட அனு மதிக்கு காத்திருக்க வேண் டும். இதனால் காலம், நேரம் வீணாகிறது.
எனவே, புதிய வீடு கட்ட வரைபடம் அனுமதிக்கு நகராட்சி, மாநகராட்சி களுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை 30 நாட்களுக் குள் செலுத்த வேண்டும் என்பதை மாற்றி, 90 நாட்க ளுக்குள் கட்டணம் செலுத்த ஆன்லைன் சாப்ட்வேரை மாற்றியமைக்க வேண்டும் என பொதுமக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.