சென்னை,ஜூலை 12-
இந்தியாவின் முதன்மையான இயந்திரக் கருவிகளின் கண்காட்சியான ஏ.சி.எம்.இ.இ 2023, வரும் ஜூன் 15 முதல் 19 தேதி வரை, சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது.
இதனை அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் (ஏ.ஐ.இ.எம்.ஏ) நடத்த விருக்கிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
உலகெங்கிலும் இயந்திர கருவிகள் மற்றும் உற்பத்தி தொழில்நுட்பத்தில் ஏற்பட்டு வரும் சமீபத்திய முன்னேற்றங்களை நமது நாட்டு தொழில்துறையினர் காண்பதற்கான வாய்ப்பை வழங்குவதே இந்த கண்காட்சியின் நோக்கமாகும் என்று ஏஐஇஎம்.ஏ தலைவர் கே.சாய் சத்ய குமார் கூறினார்.
பெருந்தொற்றுக்கு பின்னர் தற்போது மூலதன பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவற்றில் உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகியவை அடுத்த சில ஆண்டுகளில் வேகமாக அதி கரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
ஏசிஎம்இஇ 2023 இல் 435 நிறு வனங்கள் பங்கேற்கவிருக்கின்றன. பெல்ஜியம், கனடா, சீனா, இங்கிலாந்து அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, ஜப்பான், கொரியா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் இதில் பங்கேற்கின்றன. ரூ.650 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெறும் என்றும் எதிர்பார்ப்பதாக ஏசிஎம்இஇ 2023 ஒருங்கிணைப்பாளர் பி.எஸ்.ரமேஷ் கூறி னார். இந்த நிகழ்விற்கு அனுமதி இல வசம். ஆனால் பார்வையாளர்கள் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். www.acmee.in