சென்னை, ஏப். 13- சென்னை மாநகராட்சி 200 வார்டுகளில் மக்கள் பணியாற்ற புதிய கவுன் சிலர்கள் கடந்த மாதம் பொறுப்பேற்றுக் கொண்ட னர். இதையடுத்து வார்டுக ளில் அடிப்படை பணிகள் தற்போது வேகமாக நடை பெற தொடங்கியுள்ளன. முக்கிய பணிகளான குப்பை அள்ளுவதை தீவிர மாக கண்காணிக்க வேண் டும். கொசுமருந்து தெளிப் பதை காலை, மதியம், மாலை நேரங்களில் ஆய்வு செய்ய வேண்டும் என ஒவ்வொரு கவுன்சிலர்களுக்கும் மேயர் பிரியா சுற்றறிக்கை அனுப்பி யுள்ளார். தங்கள் பகுதியைச் சேர்ந்த வார்டுகளை கவுன் சிலர்கள் தினசரி ஆய்வு செய்ய வேண்டும். மக்களின் அடிப்படையான சுகாதாரம், குடிநீர் பிரச்சினைகள், கழிவு நீர் அடைப்பு போன்ற வற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தெருக்களில் குப்பை களை சேகரிக்க வரும் சுகாதாரப் பணியாளர்கள் வருகை பதிவேட்டை கவுன்சிலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். குப்பை தொட்டி கள் 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்வதை கண்காணிக்க வேண்டும். கொசு மருந்து அனைத்து பகுதிகளுக்கும் தெளிப்பதை உறுதி செய்ய வேண்டும். அதிகாரிகளுக்கு உறுதுணை யாக இருந்து வார்டு பணி களை மேற்கொள்ள வேண்டும் என அதில் குறிப் பிடப்பட்டுள்ளது.