districts

சென்னை முக்கிய செய்திகள்

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள்  படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை,ஏப்.2- சென்னை மாநகராட்சி  ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு  பணிகளில் முன்னாள் படைவீரர்கள் சிறப்புக் காவலர்களாக  ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்கு சென்னை மாவட்டத்தை சேர்ந்த 65 வயதுக்குட்பட்ட உடல் ஆரோக்கியம் உள்ள அனைத்து முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் இதர தரத்தில் உள்ள முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம். உரிய தகுதியுடைய முன்னாள் படைவீரர்கள் சென்னை  மாவட்டம் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகம், சைதாப்பேட்டை, சென்னை-15 எனும் முகவரியை அணுகி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்படும். இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு 044-2235 0780 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காவேரி மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை 

சென்னை, ஏப்.2-  ரேடியல் ரோட்டில் உள்ள காவேரி மருத்துவமனை சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையை முதல்முறை சமீபத்தில் வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளது.  42 வயதான பெண், இறுதி நிலை சிறுநீரக செயலிழப்பு காரணமாக நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக  டயாலிசிஸ் செய்து வந்தார். அவர், குடும்ப சிறுநீரக நோயால்  பாதிக்கப்பட்டிருந்தார். மேலும், அவரது சகோதரருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்காக அவரது தாய் ஒரு சிறுநீரகத்தை வழங்கியிருந்தார். அவர் குடும்பத்தில் வேறொரு தானம் கொடுப்பவர் இல்லாததால், அவர் மருத்துவமனையின் இறந்த நன்கொடையாளர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார்.  சென்னை ரேடியல் ரோட்டில் உள்ள காவேரி மருத்துவ மனையில் இறந்தவரின் சிறுநீரகம் நன்கொடையாக வழங்கப்பட்டதன் காரணமாக, நோயாளிக்கு கடந்த மாதம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது என்று  மூத்த ஆலோசகரும், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணருமான மருத்துவர் முத்துக்குமார் கூறினார். அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு, நோயாளி நன்றாகக் குணமடைந்தார் மற்றும் அவரது சிறுநீரக செயல்பாடு திறம்பட மீட்டெடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

அர்விந்த் நிறுவனம் ஒப்பந்தம் 

சென்னை, ஏப்.2-  ஜவுளித்துறையில் முன்னணி நிறுவனமான அர்விந்த் லிமிடெட், அதன் பிரீமியம் சூட்டிங் மற்றும் ஷர்ட்டிங் பிராண்டான ப்ரைம்ஆன்டியின் விளம்பர தூதராக உதய்பூர்  ராஜ வம்சத்தை சேர்ந்த டாக்டர் லக்ஷ்யராஜ் சிங் மேவாரை நியமித்துள்ளது. இதற்காக அவருடன் ஒப்பந்தம்  ஒன்றை செய்துகொண்டுள்ளது.  பல்வேறு துறைகளில் தனித்திறமை வாய்ந்த லக்ஷ்யராஜ் சிங் கல்வி, விளையாட்டு துறைக்கு ஆதரவு அளித்து வருகிறார். தனது இளமைப் பருவகாலம் தொட்டே,  உன்னதமான நோக்கங்களை முன்னிறுத்தி தன்னலம் கருதாது, அர்ப்பணிப்புடன் அவர் பணியாற்றி வருவதாக வும் அவருடன் செய்துகொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் நிறுவனத்தின் தயாரிப்புகளை மக்களிடம் விரைவாக கொண்டு செல்ல உதவும் என்றும்  அர்விந்த் நிறுவன நிர்வாக இயக்குநர் குலின் லால்பாய் கூறியுள்ளார்.

சாலை விபத்தில் மாணவர் பலி

சென்னை, ஏப். 2- சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் (21). இவர் மதுரவா யல் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி யில் பிசிஏ மூன்றாமாண்டு படித்து வந்தார்.  மனோஜ் கடந்த 24ஆம் தேதி தனது மோட்டார்  சைக்கிளில் அண்ணா நகரில் இருந்து அயனா வரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறி, சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு கனரக வாகனம் மீது மோதியது. விபத்தில் காயமடைந்த மனோஜ் மீட்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த  அவர் திங்களன்று உயிரிழந்தார். இதுகுறித்து  அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.