districts

img

மக்களின் ஒற்றுமையே நாட்டின் ஒற்றுமை

புதுச்சேரி, ஜன.18-  இந்தியா வலிமையாக இருப்ப தற்கு மக்கள் ஒற்றுமை மட்டுமே என்று சென்னை உயர் நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி தாவீது அன்னுசாமி தெரிவித்தார். மக்கள் ஒற்றுமையை மேம்படுத்த, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி, வெறுப்பு அரசியலை வேரறுக்க ‘அன்பிலதனை அறம்’ அனைத்திந்திய கலைப் பயணம் துவக்க விழா நிகழ்ச்சி புதுச்சேரியில் உள்ள மகாகவி பாரதியார் இல்லத்தில் வியாழக்கிழமை (ஜன. 18) நடை பெற்றது. முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் புதுச்சேரி செய லாளர் மணி.கலியமூர்த்தி, பேரா சிரியர் இளங்கோ ஆகியோர் தலைமை தாங்கினார். சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தாவீது அன்னுசாமி கலை பய ணத்தை  துவக்கி வைத்து பேசிய அவர்,“ இந்தியாவில் பலதரப்பட்ட சமூக மக்கள் வேற்றுமையை மறந்து  ஒற்றுமையாக வாழ்ந்து வரு கின்றனர்” என்றார். இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் மற்றும் இன்னும் பிற மதங்களை சார்ந்த மக்களிடத்தில் தற்போது ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது. எனவே சமூக நல்லி ணக்கத்தை வலியுறுத்தி இந்த கலை பயணத்தை துவக்கி வைப்ப தில் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியா இன்றைக்கு வலிமையாக இருப்ப தற்கு மக்கள் ஒற்றுமை மட்டுமே காரணம் என்றும் அவர் தெரி வித்தார். விழாவில் முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் வினீத் திவாரி, நாடகவியலாளர் பிரளயன், சுதா சுந்தரராமன், அரிமளம் சு.பத்மநாபன், பாவ லர்கள் மு.கு.ராமன்,இனாமுல் ஹஸன், நாட்டிய கலைஞர் கிருத்திகா ரவிச்சந்திரன், கலை பயண ஒருங்கிணைப்பாளர்கள் சு.ராமச்சந்திரன், எல்லை.சிவக்குமார்,முனைவர் மேரிஸ் டெல்லா,கலைமாமணி ஜெய மூர்த்தி உள்ளிட்ட திரளான கலை ஞர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, மகாகவி பாரதி யார் படத்திற்கு மரியாதை செலுத்தினர். பிறகு, கலை பயணம் துவங்கியது. பாவேந்தர் பாரதிதாசன், புதுச்சேரி விடுதலை போராட்டத் தலைவர் சுப்பையா ஆகியோர் நினைவு இல்லத்தில் தலைவர்கள் சிலைக்கு மரியாதை செலுத்தினர். இந்த கலைப் பயணம் வெள்ளிக்கிழமையும் (ஜன.19) புதுச்சேரியில் பிரச்சாரம் செய்கிறது. 10 மையங்களில் நடைபெறும் கலை பயண விழாவில், சென்னை கலைக்குழு, தெண்கண் பறை இசைக்குழு,காம்ரேட் கேங்ஸ்டா வின் ராப் இசைக்குழு,புதுச்சேரி சப்தர் ஹஸ்மி கலைக்குழு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கலைக்குழு கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.