சென்னை,ஏப்.26 எரிபொருள் சிக்கனத்தில் ஒவ்வொரு வரும் பங்களிப்பை ஆற்றவேண்டும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கேட்டுக்கொண்டார். சென்னையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் எரிபொருள் சிக்கன விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கிவைத்து அவர் பேசுகையில், ஆரோக்கியமான சூழலையும் நிலைத்த எதிர்காலத்தையும் நமது வருங்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம் என்பதை நாம் உணர வேண்டும். ஆற்றல் சிக்கனத்தை வலி யுறுத்தும் இந்த விழிப்புணர்வு பரப்புரை யில் நாம் ஒவ்வொருவரும் பங்களிப்பு அளித்து ஆற்றல் சிக்கனத்தை செயல் வடிவம் ஆக்க வேண்டும் என்றார். சிக்கனம் என்பது நம் அன்றாட வாழ்வில் ஒன்று கலந்து நமது பண்பாடு என்பதாக மாறி இந்த உலகை மகிழ்ச்சி மிகுந்ததாகவும் பசுமையானதாகவும் ஆக்க வழிவகுக்கும்” அவர் மேலும் பேசுகையில், இந்தியாவின் நிகர பூஜ்ஜியம் என்பதை 2060 க்குள் எய்திட ஏதுவாக தமிழ்நாடு அரசு, போக்கு வரத்து கொள்கைகளில் ஏராளமான முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.
மேலும், இந்திய அரசு இலக்கு நிர்ணயிப்பதற்கு முன்பாகவே தமிழ்நாடு அரசு, நிகர பூஜ்ஜியம் அடைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று கூறினார். ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறு வனத்தின் தென் மண்டல சில்லறை வர்த்தக துறையின் தலைமை பொது மேலாளரும் தலைவருமான சஞ்சய் மாத்தூர் , சிக்கன உறுதிமொழி ஏற்பு நிகழ்வை நடத்தி வைத்தார். பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் தென் மண்டல மனிதவள சேவை தலைவர் சுஷ்மித் தாஸ் நன்றி கூறினார். இந்தியன்ஆயில் நிறுவனத்தின் மாநில தலைவர் மற்றும் தமிழ்நாடு & புதுச்சேரி மாநில எண்ணெய் தொழில் துறை ஒருங்கிணைப்பாளர் வி.சி. அசோகன், இந்தியன்ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநர் (மண்டல சேவைகள்) & தென் மண்டல எண்ணெய் தொழில் துறையின் மண்டல ஒருங்கிணைப்பாளர் எஸ். தன பாண்டியன், உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர். எண்ணெய் சிக்கனம் பற்றிய இந்த விழிப்புணர்வு பிரச்சாரமானது நாடு முழுவதும் ஏப்.24 தொடங்கியது. வரும் மே 8, வரை “நிகர பூஜ்ஜியம் என்பதை நோக்கி ஆற்றல் சேமிப்பு” என்கிற கருப்பொருளில் மேற்கொள்ளப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.