சென்னை, ஜன. 18- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆர்.கே.நகர் 38ஆவது வட்டத்தில் 17ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் அருள்கோட்டை முருகன் கோவில் பூசாரி சுப்பிரமணியம், சிறுபான்மையினர் மக்கள் நலக்குழு வின் வடசென்னை மாவட்டத் தலை வர் எம்.பி.முகமது நாசர், பர்மா தமிழர் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகி முகமது உசேன், பேதர்ஸ்சா சர்ச் பாஸ்டர் ஜான் சாமுவேல் , தென்னிந்திய திருச்சபையின் நிர்வாகி சவுந்தரபாண்டியன் , சால்வேஷன் ஆர்மி சர்ச் நிர்வாகி ரத்னதாஸ், மண்டலக்குழு தலைவர் நேதாஜி யூ கணேசன், ரேணுகா தேவி கோவில் தலைவர் சொக்கலிங்கம் ஆகியோர் ஒன்று கூடி சமத்துவ பொங்கல் வைத்தனர். சாதி, மதங்களை கடந்து மனிதம் காப்போம் என்று உறுதி மொழி ஏற்றனர். அதனைத் தொடர்ந்து வைஷ்ணவி மற்றும் நேகா ஸ்ரீயின் பரதநாட்டியம் நடைபெற்றது. ஜீ தமிழ் சரிகமப நிகழ்ச்சியின் போட்டியாளர் கே.பிரியன் கலந்து கொண்டு பாடினார். வாலிபர் சங்க விளையாட்டுக் குழுவின் சிலம்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.லோகநா தன், வாலிபர் சங்க மாவட்டச் செயலா ளர் எல்.பி.சரவணதமிழன், பகுதி தலைவர் ராஜா, பொருளாளர் ஷாஜ கான், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் காவியா, நிர்வாகிகள் குணா, கார்த்திக், அலெக்ஸ், கோகுல், பிரியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.