புதுச்சேரி, நவ.4- உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து புதுச்சேரி முதலியார் பேட்டை தபால் நிலையம் எதிரில் இ.பி.எப். ஓய்வூதியர்கள் கறுப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இபிஎப் பென்ஷனர்கள் சங்கத் தலைவர் வி. ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சங்கத்தின் கவுரவத் தலை வர் நடராஜன், பொதுச் செயலாளர் குண சேகரன் ஆகியோர் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினர். பென்ஷனர்கள் சங்க நிர்வாகிகள் ராம லிங்கம், வேலாயுதம், செல்வராஜ், ஆவ ணியப்பன், செங்குளத்தான் பரசுராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.