செங்கல்பட்டு,ஜூன் 8- செங்கல்பட்டு மாவட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் தொடக்க விழா செங்கல்பட்டில் சனிக்கிழமையன்று (ஜூன் 8) சங்கத்தின் தலைவர் ஓய்வு பெற்ற அலுவலர் செ.மனோ கரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சங்கத்தின் செயலாளர் என்.இளங்கோ வரவேற்று பேசினார். சங்கத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடு கள் குறித்து துணைத்தலைவர் க.அறி பேசினார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வித மாக கூட்டத்தில் கலந்து கொண்ட அனை வரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளை பாது காக்க வலியுறுத்தும் தீர்மானங்களை துணைத்தலைவர் டி.செல்வராஜ், இணைச் செயலாளர்கள் எஸ்.ஆதிசேஷன், எஸ்.உதயசூரியன் செயற்குழு உறுப்பினர்கள் ஜெ.செல்வன், டி.மணிவண்ணன் ஆகியோர் முன்மொழிந்தனர்.
செங்கல்பட்டு இராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் ப.கி.கிள்ளிவளவன், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் உதவி பணி இயக்குநர் விவேக்குமார், எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் டிரஸ்ட்டியான கே.மோகன சுந்தரம் ஆகியோர் கருத்துரை வழங்கினர். சங்கத்தின் பொருளாளர் சி.இராமலிங்கம் நன்றி கூறினார்.