districts

img

செங்கொடி பயணத்திற்கு உளுந்தூர்பேட்டையில் உற்சாக வரவேற்பு

 கள்ளக்குறிச்சி, ஜன.2 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது தமிழ் மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெறுவதை யொட்டி மதுரை வில்லாபுரத்தில் இருந்து விழுப்புரத்திற்கு தியாகி லீலாவதி நினைவிடத்திலிருந்து செங்கொடி கொண்டுவரப்பட்டது. இந்த கொடி பயணத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன்,மாநில குழு சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வந்த கொடி பயணத்திற்கு கட்சியின் உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றியம் சார்பில் தேசிய நெடுஞ்சாலை ஏ.சாத்தனூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் நகர செயலாளர் பி.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராள மானோர் கலந்துகொண்டு  பயணக் குழு வினரை வரவேற்றனர். இதில் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், ஜி.ஆனந்தன், பி.சுப்பிரமணியன், எம்.கே. பூவராகவன், எம்.செந்தில், எம்.கே.பழனி, ஜே.ஜெயக்குமார்,வி.ரகுராமன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம். ஆறுமுகம்,வி.சாமிநாதன்,ஏ.தேவி, கே.தங்கராசு,ஷேக்அலாவுதீன், மற்றும் நகரக் குழு உறுப்பினர்கள் தீபன்ராஜ், கஸ்தூரி எம்.ராஜேந்திரன் பி.சேகர் மேலும் பலர் கலந்து கொண்டனர்.