districts

img

விழுப்புரத்தில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்கா மாவட்ட ஆட்சியர் மோகன் தகவல்

விழுப்புரம்,ஜன.22- விழுப்புரத்தில் ரூ.29 லட்சம் மதிப்பில் நடந்து வரும் நீச்சல் குளம் சீர மைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார். விழுப்புரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நீச்சல் குளம் உள்ளது. இந்த நீச்சல் குளம் பராமரிப்பின்றி சில ஆண்டுகளாக பயன் பாடின்றி இருந்து வந்தது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள், நீச்சல் பயிற்சி  பெறுபவர்களின் கோரிக் கையை ஏற்று தற்போது நீச்சல் குளத்தில் பரா மரிப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணி களை தரமான முறையில் விரைந்து முடித்து பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத் தினார். பின்னர் ஆட்சியர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், தற்போது நீச்சல் குளத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தைகள் நீச்சல் பழகும் நீச்சல் குளத்தின் சேதமடைந்த தரை தளத்தை மாற்றி, இத்தாலியன் டைல்ஸ் பதித்திடவும், பெரியவர்கள் நீச்சல் பழகும் நீச்சல் குளத் தின் தரைத்தளத்தை மாற்றி  புதிய டைல்ஸ் பதித்திடவும் நீச்சல் குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பேவர் பிளாக்  கல் பதித்திடவும் அறிவுறுத் தப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பூங்கா அமைத்து பராமரிக் கப்பட உள்ளது. மேலும்  பெருந்திட்ட வளாகத்தில் உள்ள நடைபயிற்சி பூங்கா வில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் இரண்டரை கோடி  ரூபாய் மதிப்பில் பல்வேறு  பொழுதுபோக்கு அம்சங்க ளுடன் கூடிய பூங்கா அமைக் கும் பணிகள் தொடங்கப் படும் என்றும் அவர் கூறினார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பரிதி, உதவி செயற்பொறியாளர் விஜயா, விழுப்புரம் கோட் டாட்சியர் ரவிச்சந்திரன், தாசில்தார் ஆனந்தகுமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

;