districts

மழைகாலத்தில் வீடுகளுக்குள் நுழையும் பாம்புகளை பிடிக்க தொலைபேசி எண்கள்

சென்னை, நவ. 11- தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கும் வாய்ப்பு உள்ளது. பாம்பு மற்றும் விஷ ஜந்துக்களின் இருப்பிடமான புதர் மற்றும் பொந்துகளில் மழை வெள்ளம் புகுந்தவுடன், அவைகள் வெளியே வந்து வீடுகளுக்குள் புகுந்து விட வாய்ப்புள்ளது. ஏற்கனவே தேங்கி யுள்ள நீரில் பாம்பு மற்றும் ஊர்வன செல்லும் வீடியோக்கள் சில சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது. சென்னை மற்றும் செங்கல்பட்டு சுற்று வட்டார பகுதியில், பாம்புகளைப் பிடிப்ப வர்களின் பெயர் மற்றும் செல்போன் நம்பர் களை மாவட்ட வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போரூர், ஐயப் பந்தாங்கல், வளசரவாக்கம், பூந்தமல்லி, நெற்குன்றம் மற்றும் கோயம்பேடு ஆகிய  பகுதிகளுக்கு கிருபா 8667332277, போரூர்,  ராமாபுரம், நெற்குன்றம், மணப்பாக்கம், முகலிவாக்கம் மற்றும் பெரம்பூர் பகுதிக ளுக்கு சக்தி 90943 21393, அண்ணாநகர் முதல்  பட்டாபிராம் வரை உள்ள பகுதிகளுக்கு கணேசன் 74489 27227, குரோம்பேட்டை பகுதி களுக்கு  ெஜய்சன் 80562 04821, குரோம் பேட்டை முதல் தாம்பரம் வரையிலான பகுதி களுக்கு ராபின் 88078 70610, போரூர் மற்றும்  ஆலப்பாக்கம் அருகிலுள்ள ஏரியாவுக்கு மணிகண்டன் 98403 46631, குரோம்பேட்டை ஏரியாவுக்கு ரவி 96001 19081, திருவான்மியூர், இசிஆர் மற்றும் ஒஎம்ஆர் ஏரியாவுக்கு ஷாவன் (அ) ஷேவன் 94450 70909, 63791 63347, மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர் பகுதிகளுக்கு நாகேந்திரன் 99400 73642, தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளுக்கு பிரவீன் 99622 05585, தாம்பரம், படப்பை மற்றும் திரு நீர்மலை பகுதிகளுக்கு சந்திரன் 98407 24104,  கிழக்கு கடற்கரை சாலை,  பழைய மகாபலி புரரம் ரோடு அர்ஜூன் 91765 43213, பெருங் களத்தூர் முதல் மறைமலை நகர் வரை முருகேசன் 98848 47673, சோழிங்கநல்லூர் முதல் கேளம்பாக்கம் வரை விஜய் ஆனந்தன் 98843 06960, செங்கல்பட்டு மாவட்டம் ஆதித்தன் (பாரஸ்ட் கார்டு) 84895 17927 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.