அனைத்து குழந்தைகளையும் அரசு பள்ளியில் சேர்ப்போம் வாகன பிரச்சார இயக்கம் திருவாலங்காடு ஒன்றியத்தில் நடைபெற்றது. பேருந்துநிலையம் அருகே வட்டார கல்வி அலுவலர் ஜி.மாரியம்மாள் இதனை தொடங்கி வைத்தார். எஸ்.எம்.சி ஒன்றிய கருத்தாளர் வி.ஏழுமலை,வட்டார மேற்பார்வையாளர் ரவி, இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன், ஆசிரியர் பயிற்றுநர் லீதியாள் தேவகிருபை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.