பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் பணியமர்த்தக் கோரி புதனன்று (பிப்.23) எல்ஐசி பணியாளர் கூட்டுறவு வங்கி முன்பு, ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்கத்தின் இணைச் செயலாளர் மூவேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் இ.சர்வேசன், பெபி மாநில பொதுச் செயலாளர் டி.ரவிக்குமார், சிஐடியு மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை உள்ளிட்டோர் பேசினர்.