districts

img

கோயம்பேட்டில் பணியாளர்கள் ஓய்வு கூடம், சிற்றுண்டியகம்: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை,ஏப்.28- சென்னை மறைமலைநகரில் ரூ.5.85 கோடி செலவில் மறைமலை அடிகளார் சமுதாயக்கூடம் மற்றும் கோயம்பேட்டில் ரூ.2.67 கோடி செலவில் ஓய்வுக்கூடம் மற்றும் சிற்றுண்டியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாழனன்று (ஏப்.28) திறந்து வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் மறைமலைநகரில் 5 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மறைமலை அடிகளார் சமுதாயக்கூடத்தை முதல்வர் திறந்து வைத்தார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும், சென்னைப்  பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் செங்கல்பட்டு மாவட்டம், மறை மலைநகரில், மறைமலை அடிகளார் சமுதாயக்கூடம் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த சமுதாயக்கூடம், 400 பேர் அமரும் வசதி கொண்ட நிகழ்ச்சி மண்டபம், 200 பேர் உணவருந்தும் வகையில் உணவுக்கூடம், மணமகன் மற்றும் மணமகள் அறைகள், விருந்தினர் அறை கள், சமையலறை, பொருள் இருப்பு அறை, வாகன நிறுத்துமிடம், தீய ணைப்பு வசதி ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் பணி யாற்றிவரும் தினக்கூலி பணியாளர்க ளின் பயன்பாட்டிற்காக கோயம் பேட்டில் 5,419 சதுர அடி கட்டடப் பரப்பள வில் 2 கோடியே 67 லட்சம் ரூபாய்  செலவில் கட்டப்பட்டுள்ள ஓய்வுக்கூடம் மற்றும் சிற்றுண்டியகமும் திறக்கப் பட்டது. இக்கட்டிடத்தின் தரைத்தளத்தில், 24 இருக்கைகள் கொண்ட உணவருந்து மிடம், சமையலறை மற்றும் கழிவறை வசதிகள் உள்ளன. முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் தலா 20 எண்ணிக்கைகள் கொண்ட படுக்கை வசதியுடன் கூடிய ஓய்வுக்கூடம், கழிவறை, குளியலறை வசதிகள் மற்றும் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சிஐடியு நன்றி
சிஐடியுவின் நீண்டகால கோரிக் கையை ஏற்று கோயம்பேடு வணிக  வளாகத்தில் சுமைப்பணி தொழிலாளர்க ளுக்கு ஓய்வறை அமைத்து கொடுத்த தற்காக முதலமைச்சர், வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரராஜா ஆகியோருக்கு சென்னை லோடிங் அன்லோடிங் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் நன்றி தெரிவித்துள்ளது.

;