districts

img

மகப்பேறு பிரிவில் தொடரும் மரணங்களை தடுத்திடுக: வாலிபர்- மாதர் சங்கம் வலியுறுத்தல்

மதுராந்தகம், ஏப்.18- செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் மகப்பேறு பிரிவில் தொடரும் மரணங்களை தடுத்திட வலி யுறுத்தியும் ஆரம்ப சுகாதார நிலை யங்களில் அடிப்படை வசதிகளை  மேம்படுத்தக் கோரியும் வாலிபர் சங்கம், மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் லத்தூர் ஒன்றிய நிர்வாகி வரதராஜன் தலைமையில் கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு செவ்வாயன்று (ஏப்.18) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் மகப்பேறு பிரிவில் தொட ரும் மரணங்களை தடுத்து நிறுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும், கடந்த 10 ஆம் தேதி செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் உயிரிழந்த பிரமிளாவிற்கு உரிய நீதி வழங்க வேண்டும். தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், உயி ரிழந்த தாயின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலை யம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதலான மருத்துவர்களையும் ஊழி யர்களையும் நியமித்து போதுமான நவீன மருத்துவ உபகரணங்களை உறுதிப்படுத்த வேண்டும், கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலை யத்தில் 24 மணிநேரமும் மருத்துவர் மற்றும் பணியாளர் இருக்கும் சுகா தார நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலர் ச.ஜீவானந்தம், அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜெயந்தி, சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் பேசினர்.