ராணிப்பேட்டை, செப். 11 - தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தில் இணைக் கப்பட்ட காட்டு நாயக்கன் பழங்குடி மக்கள் சங்கத் தலைவர்கள் ராணிப் பேட்டை மாவட்ட ஆட்சி யரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில், ராணிப்பேட்டை மாவட்டத்தின் சில பகுதி களில் காட்டு நாயக்கன் பழங்குடி மக்கள் கணக் கெடுப்பு விடுபட்டுள்ளது. பழங்குடி மக்களின் சமூக பொருளாதார கணக்கெடுப்பின் போது விடுபட்ட காட்டு நாயக்கன் பழங்குடி மக்களை சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இன்று வரை கணக்கெடுப்பில் சேர்க்கப் படவில்லை. எனவே தாங்கள் தலையீட்டு, காட்டு நாயக்கன் பழங்குடி மக்கள் சங்க நிர்வாகிகளையும் இந்த கணக்கெடுப்பில் இணைத்துக்கொள்ள வேண் டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். சங்கத்தின் மாநில பொது செயலாளர் ஆ. அய்யனார், மாவட்டச் செயலாளர் சு. வெங்கடேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எல்.சி. மணி, பொருளாளர் சி. ராதா கிருஷ்ணன், செந்தில், ரமேஷ், சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பா.உமா, மாவட்டத் தலை வர் ம. கற்பகம், மாவட்ட நிர்வாகிகள் மலர், புஷ்பா உள்ளிட்டோர் உடனிருந்த னர்.