சென்னை, ஏப். 25 - சென்னை மாநகராட்சி நகர விற்ப னைக்குழு (வெண்டிங் கமிட்டி) தேர்தலை ஜனநாயக பூர்வமாக நடத்த வேண்டும் என்று சென்னை மாநகர் சிறுகடை வியாபாரி கள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் நகர விற்பனைக் குழு அமைக்க தெரு வோர வியாபாரிகளிலிருந்து 6 உறுப்பி னர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏப்.27ந் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் கூட்டமைப்பு சார்பில் ஜி.மோனிஷா (ஆதிதிராவிடர்), ஏ.முகமது (சிறுபான்மையினர்), எஸ்.சித்ரா (மகளிர்), பி.மணி (எ) மணிமாறன் (பிற்படுத்தப் பட்டோர்), பி.சரவணகுமார் (மாற்றுத் திறனாளி), கே.பலராமன் (பொதுப்பிரிவு) ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த வேட்பாளர்களை அறிமுகம் செய்து செவ்வாயன்று (ஏப்.25) செய்தியாளர்களிடம் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எம்.வி.கிருஷ்ணன் கூறியதாவது: 38 ஆயிரத்து 588 தெருவோர வியா பாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கி யிருக்க வேண்டும். ஆனால், 23 ஆயிரம் அடையாள அட்டை மட்டுமே மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் பெரும்பகுதி விநியோகம் செய்யப் படவில்லை. 12 ஆயிரத்திற்கும் மேற்பட் டோருக்கான அடையாள அட்டைகள் மண்டல அலுவலகங்களுக்கே வந்து சேரவில்லை. விநியோகம் செய்யப்படாமல் மண்டல அலுவலங்களில் வைத்துள்ள அடையாள அட்டைகளை கொண்டு முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. இதனால் தேர்தல் முறையாக ஜனநாயக முறையில் நடைபெறும் என்ற நம்பிக்கை இல்லை. இந்த பிரச்சயை எடுத்துக்கூறி, அரசியல் தலையீடு இல்லாமல் தேர்தலை நடத்த வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்தினோம். அடையாள அட்டை இல்லாதவர்கள் உரிய ஆவணத்தை காட்டி வாக்களிக்கலாம் என்ற தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வின்போது, கூட்டமைப்பு நிர்வா கிகள் முஸ்தபா, அஸ்ரப்அலி, ஆஸ்கர்அலி, செல்வம், லோகநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.