districts

img

இயற்கை சீற்றங்களால் பாதிக்கும் கடலூர்: நிரந்தர கட்டமைப்பை உருவாக்க வலியுறுத்தல்

கடலூர்,டிச.27- இயற்கை சீற்றங்களால் அடிக்கடி பாதிக்கப்படும் கடலூர் மாவட்டத்திற்கு நிரந்தர கட்டமைப்பு வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்துள்ளார். கடலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உ.வாசுகி கூறியதாவது:- கடலூர் மாவட்டத்தில் மழை, வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால்  பாதிப்பு கள் ஏற்படுகிற மாவட்டம். இதனை எதிர் கொள்ள தடுப்பணைகள், அரு வாமூக்கு உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். ஆறு, ஏரி, குளங்களை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும். என்எல்சி உள்ளிட்ட நிறுவனங்களில் உள்ளூர் தொழி லாளருக்கு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு வேலைவாய்ப்பை உத்தர வாதப்படுத்த வேண்டும். அம்பிகா, ஆரூரான் சர்க்கரை ஆலைகளை அரசே ஏற்று நடத்துவதுடன், கரும்பு விவசாயிகளின் நிலுவை பணத்தை அரசு பெற்றுத்தர வேண்டும். 2.25 லட்சம் குடிசை வீடுகள் மாவட்டத்தில் உள்ளதால் இம் மாவட்டத்தை குடிசைகளற்ற மாவட்டமாக மாற்ற ஒன்றிய அரசும் மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மார்க்சிஸ்ட கட்சி சார்பில் விரை வில் கோரிக்கை மாநாடு நடத்த உள்ளது.  கடலூர் மாவட்டம் சாதிய பாகுபாடுகள் முன்னுக்கு வரக் கூடிய மாவட்டமாக உள்ளது அரசு சார்பிலேயே பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். அதற்கான ஒரு துறையை அரசு உருவாக்க வேண்டும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார். மாவட்டச் செயலாளர் டி.ஆறு முகம், மாநிலக் குழு உறுப்பினர் ஜி.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.சுப்புராயன், எம்.மருதவாணன, நகர செயலாளர் ஆர்.அமர்நாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.