சிதம்பரம், ஜூன் 6- அவசர கோலத்தில் நடந்துள்ள தூர்வாரும் பணியால் காவிரி டெல்டா கடைமடை பகுதியான கடலூர் மாவட்ட விவசாயத்திற்கு தண்ணீர் கிடைப்பது கேள்விக்குறி யாக மாறியிருக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் மாதவன் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:- மேட்டூரிலிருந்து இந்த ஆண்டு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஜூன் தொடங்கி செப்டம்பர் வரை மேற்கொள்ளப்படும் குறுவை சாகுபடிக்கு வாய்ப்புள்ளது. கடலூர் மாவட்ட டெல்டா பாசனப் பகுதியில் குறுவை சாகு படிக்கான தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், 122 பாசன வாய்க்கால்கள் 568. 67 கி.மீட்டருக்கும், 31 வடி கால் வாய்க்கால்கள் 100.50 கி.மீட்ட ருக்கும் தூர் வாருவதற்கு ரூ. 8.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இந்த பணிகள் மே 30-க்குள் முடிவடைந்ததாக பொதுப்பணித் துறை அறி வித்துள்ளது. ஆனால், பணிகள் அவசர கோலத்தில் நடந்துள்ளதால் முறை யாகத் தூர் வராமல் மேம்போக்காகப் நடந்துள்ளது என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். குறுவை சாகு படிக்கு காவிரி தண்ணீர் கடைமடை வரைக்கும் சென்று சேர்வதற்கு வாய்ப்பு இருக்குமா? எனவும் கேள்வி எழுப்புகின்றனர். புவனகிரி வெள்ளாற்று வாய்க்கால் 10 ஆண்டுகளுக்கு மேல் தூர்வாரப்படாமல் கிடப் பில் போடப்பட்டுள்ளது.
280 மேற்பட்ட வாய்க்கால்களில் 122 மட்டுமே தூர்வாரப்படுகிறது. பெரும்பாலான வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை. இதனால் வாய்க்கால்கள் முழுவதும் தூத்து போய் புதர்மண்டி கிடக்கும் நிலை உள்ளது. இதனை தண்ணீர் வரு வதற்கு முன்பு சீர்படுத்த வேண்டும். பாசன வாய்க்கால்களில் கொண்டம் இல்லாத இடங்களில் கொண்டம் கட்டி கொடுக்க வேண்டும். பழைய கொண்டங்கள் சேதம் அடைந்திருந்தால் அதை மராமத்து பணிகள் மூலம் சரி செய்ய வேண்டும். தண்ணீர் வருவதற்கு சில நாட்களுக்கு முன்பாக நிதி ஒதுக்கி அவசர கோலத்தில் தூர்வாரும் பணி நடப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இதனை மாற்றி ஒரு மாதத்திற்கு முன்பே நிதி ஒதுக்கி தூர்வாரும் பணி முறையாக வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டுமென அரசை தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம் என்று அந்த அறிக்கையில் குறிப் பிட்டுள்ளார்.