விழுப்புரம், செப்.1- விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள எல்லீஸ் அணை கடந்த ஆண்டு உடைந்தது. தற்போது பெய்து வரும் மழை சாத்தனூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஆற்றில் அதிகமாக தண்ணீர் வருகின்றது. கடந்த சில நாட்களாக வரக்கூடிய இந்த தண்ணீர் ஆற்றில் சமநிலையில் செல்லவில்லை. உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மிகப்பெரிய பள்ளமாகவும் பாதையாகவும் உருவாகி தென்பெண்ணை ஆற்றின் கரைகளில் அரிப்பு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதனால் ஏனாதிமங்கலம் விழுப்புரம் சாலை விரைவில் துண்டிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதனால் 6 கிராம மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த ஆற்று நீர் கிராமங்களுக்கு சென்றால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் எல்லீஸ் சத்திரம் கரை ஓரம் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கபட்ட நிலையில் உள்ள பகுதியை பார்வையிட்டார். அப்போது பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறையைச் சார்ந்த அதிகாரிகள் உடனடியாக கற்களை கொட்டி தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.