districts

வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மின்கட்டணம் பன் மடங்கு உயர்ந்தது

சென்னை,நவ.22- மின் கட்டண உயர்வால் வாடகை வீடுக ளில் குடியிருப்போர் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். ஒவ்வொருவரும் கூடுத லாக ஆயிரத்திற்கும் மேல் மின் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டது. குளிர்சாதனம் பயன்படுத்தும் வீடுகளில் மின் கட்டணம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை  அதிகரித்தது. தற்போது பொது பயன் பாட்டிற்கான மின் கட்டணமும் அதிகரிக்கப் பட்டுள்ளது.  கடந்த மாதமே வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக பயன்பாடு, கடைகள்  போன்றவை பொதுவாக பயன்படுத்தப்பட்ட படிக்கட்டு மின் விளக்குகள், மோட்டார், லிப்ட் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் அந்த  பாதிப்பு இப்போதுதான் தெரிய வந்துள்ளது.  இதுவரையில் 1-ஏ என்ற அடிப்படையில் முதல் 100 யூனிட்டுகளுக்கு இலவசமாக பொது பயன்பாட்டிற்கு மின் கட்டணம் கணக் கிடப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 1-டி  யாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம்  வணிக பயன்பாட்டிற்குரிய கட்டணமான ஒரு  யூனிட்டுக்கு 8 ரூபாய் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.  ஒரே வீட்டில் 3 சமையல் அறை கொண்ட  வீடுகள் இருந்தால் 3 மின் மீட்டர் பயன்படுத்தப் படுகிறது. இதுபோக 4-வதாக உள்ள ஒரு  மீட்டர் பொதுவான மின்விளக்கு, குடிநீருக் கான மோட்டார் போன்றவற்றிற்கு பயன் படுத்தப்படுகிறது. அந்த மீட்டருக்கு இதுவரையில் இலவசமாக வழங்கப்பட்ட 100 யூனிட் மின்சாரம் இனி கிடையாது.

அவற்றிற்கு ஒரு யூனிட்டிற்கு 8 ரூபாய் கட்ட ணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர  நிலையான கட்டணம் ரூ.200 வசூலிக்கப்படு கிறது. பொதுவாக பயன்படுத்தக்கூடிய மீட்டரை 100 யூனிட் உபயோகப்படுத்தி இருந்தால் ரூ.800 கட்டணமும் ரூ.200 நிலை யான கட்டணமும் சேர்த்து ரூ.1000 வசூலிக்கப்படுகிறது.  சென்னையில் இதுவரையில் பொது வான பயன்பாட்டிற்கு பலர் தனி மின்  மீட்டரை பயன்படுத்தி வந்தனர். வாடகை  வீடுகளில் வசிப்பவர்களிடம் மோட்டார், பொதுவான மின் விளக்கிற்கு தனியாக  கட்டணம் வசூலிக்க தனி மீட்டர் பயன்படுத்தி வந்தனர். மேலும் சொந்த குடியிருப்புகள், தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பொதுவான பயன்பாட்டிற்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  குடியிருப்புகளுக்கு வணிக ரீதியிலான கட்டணம் வசூலிப்பது ஏற்புடையதல்ல. இத னால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அடுக்கு மாடி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.  இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, “பொதுவான மின் உபயோக  பயன்பாட்டிற்குரிய மீட்டர் எந்தெந்த வீடு களில் உள்ளது என்பதை ஊழியர்கள் ஆய்வின் மூலம் கண்டு பிடித்து மாற்றி வரு கின்றனர். அதிகளவு ஓடாமல் இருக்கும் மீட்டர், பொதுவான மோட்டார், படிக்கட்டு  மின்விளக்கிற்கு பயன்படுத்தப்படுகிறது. அதுபோன்ற இணைப்புகளை அலுவல கத்தில் இருந்தும் கண்டுபிடித்து புதிய  கட்டணத்திற்கு  மாற்றி வருகிறோம்’ என்றனர்.