திருவள்ளூர், பிப்.12- ஈகுவார்பாளையம் மேல்பாகம் மக்க ளுக்கு மாற்று இடம் வழங்கும் வரை குடியிருப்புகளை புல்டோசரை கொண்டு இடிப்பதை தடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டியை அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சி,மேல்பாக்கம் கிராமத்தில் ஆதி திராவிடர் , பழங்குடியினர் மற்றும் அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களும் நூறு ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை பெற்றுள்ளனர். குடும்ப அட்டை, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு வசதி கள்பெற்றுள்ளனர். இந்த நிலையில் மேல்பாக்கம் கிராமம் முழுவதும், வனத்துறைக்கு சொந்த மானது என கூறி வீடுகளை காலி செய்ய வேண்டும் என வனத்துறையினர் நோட்டீஸ் கொடுத்து வருகின்றனர். இதனால் அதிர்ச்சி யடைந்த மக்கள் செய்வது அறியாமல் திகைத்து நிற்கின்றனர். வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் உள்ள வீடுகளை காலி செய்ய வேண்டும், இல்லையென்றால் வனத்துறை யினர் வீட்டை இடித்து தள்ளி விடு வோம். பிப் 14 வரை வீட்டில் உள்ள பொருட் களை எடுத்து செல்ல வேண்டும். பிறகு எல்லா பொருட்களும் வனத்துறைக்கு சொந்தமாக்கப்படும். என எல்லா வீடுகளிலும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மாற்று இடம் வழங்க சிபிஎம் வேண்டுகோள் வனத்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் வழக்கம் போல மாற்று இடம் கொடுக்காமல் குடியிருப்புக்களை காலி செய்ய வேண்டும். இல்லையெனில் புல்டோசர்களை கொண்டு வீடுகள் தரைமட்டமாக்கப்படும் என அதிகாரிகள் மிரட்டுவது தொடர்கிறது. சொந்த நாட்டில் வாழும் மக்களுக்கு 3 சென்ட் நிலம் கூட பட்டா போட்டு கொடுக்க முடி யாத நிலையுள்ளது. மாற்று இடத்தில் குடிநீர், மின் இணைப்பு உட்பட அனைத்து தேவை களையும் ஏற்பாடு செய்து கொடுக்கிற வரை தற்போது குடியிருக்கிற இடத்தி லேயே தங்குவதற்கு அனுமதிக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஎம் ஈகுவார்பாளை யம் கிளை செயலாளர் அ.ரவி வலி யுறுத்தியுள்ளார். மேலும் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட எல்லையிலேயே கிராம நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளதால் அந்த இடத்திலேயே பாதிக்கப்பட்ட அனை வருக்கும் குடிமனைபட்டா வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.