சென்னை,மே 20- சென்னையில் உள்ள தாம்பரம்-கடற்கரை ரயில்வே வழித்தடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வழித்தடத்தில் ஓடும் மின்சார ரயில் களில் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்த வழித்தடத்தில் எழும்பூர் முதல் சென்னை கடற்கரை வரை 3 ரயில் பாதைகள் உள்ளன. இதில் 2 பாதை யில் புறநகர் மின்சார ரயில்கள், ஒரே பாதையில் வட மாநில எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே 4.3 கிலோ மீட்டர் நீளத்திற்கு 4-வது புதிய ரயில் பாதை அமைக்க தெற்கு ரயில்வே பரிந்துரை செய்தது. இந்த ரயில் பாதையை ரூ.279 கோடி செலவில் அமைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வரு கின்றன. இந்நிலையில் எழும்பூரில் இருந்து கடற்கரை வரையிலான 4-வது ரயில் பாதை அமைக்கும் பணி வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கப்படும் என தெற்கு ரயில்வே வாரியம் தெரிவித் துள்ளது. இதேபோன்று வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையை ஆகஸ்ட் மாதம் முதல் சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுவரை ஏழு சிறிய பாலங்கள் மற்றும் ஒரு பெரிய பாலத் தின் பணிகள் முடிவடைந்து, கூவம் ஆற்றின் கரையோரத்தில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார். ரயில் பாதையில் சிக்னல், தகவல் தொடர்பு சாதனங்கள் நிறுவவும், இவற்றுக்கான கட்டிடங்கள் கட்டுவ தற்கு ரூ.12 கோடியே 65 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதையடுத்து தண்டவாளம் அமைக் கும் பணி தொடங்கி விரைவுபடுத்தப் படும் எனவும், வரும் ஆகஸ்ட் மாதம் இந்த பணிகள் நிறைவு பெறும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.