districts

img

கல்வி வளாகங்கள், பணியிடங்களில் பாலியல் புகார் குழுக்கள் மாதர் சங்க தென்சென்னை மாநாடு வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 9 - கல்வி வளாகங்கள், பணியிடங்களில் பாலியல் புகார் குழுக்களை அமைக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக  மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. மாதர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட 16வது மாநாடு சனிக்கிழமையன்று (ஜூலை 9) சைதாப்பேட்டையில் தொடங்கி யது. மாநாட்டிற்கு மாவடடத் தலைவர் எஸ்.சரவணசெல்வி தலைமை தாங்கினார். சங்க கொடியை மாவட்டக்குழு உறுப்பினர் பி.வசந்தா ஏற்றினார். அஞ்சலி தீர்மானத்தை மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.பிரேமாவதி வாசித்தார். வரவேற்புக்குழுத் தலைவர் ஒய்.இஸ்மாயில் வரவேற்றார். மாநிலச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். வேலை அறிக்கையை மாவட்டச் செயலா ளர் ம.சித்ரகலாவும், வரவு செலவு அறிக்கையை பொருளாளர் ஜெ.ஜூலி யட்டும் சமர்ப்பித்தனர். சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.ராணி, சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலா ளர் கே.மணிகண்டன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் எஸ்.புகழ்செல்வி ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா நிறை வுரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் எஸ்.பிச்சையம்மாள் நன்றி கூறினார். 19 பேர் கொண்ட மாவட்டக்குழுவின் தலைவராக எஸ்.சரவணசெல்வி, செயலாள ராக ம.சித்ரகலா, பொருளாளராக ெஜ.ஜூ லியட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தீர்மானங்கள்
இந்த மாநாட்டில், மூவலூர் ராமாமிர்தம் நினைவு திருமண உதவி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும், பொதுவிநியோக திட்டத்தை சீரிய  முறையில் செயல்படுத்த வேண்டும், சோழிங்கநல்லூர் தொகுதியை மையப் படுத்தி அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும், பொதுசுகாதார அமைப்புகளை மேம்படுத்த வேண்டும். ஏழை எளிய மக்களின் குடியிருப்புகளை அகற்றாமல், வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.