சென்னை, மே 11- மதுரை மாநகராட்சி கூட்டத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய ஆளும் கட்சியினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக அரசை தமிழ்நாடு யூனியன் ஆப் ெஜர்னலிஸ்ட்ஸ் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.எஸ்.டி புருஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: மதுரை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் மே 11 அன்று நடைப்பெற்றது. கூட்டம் துவங்குவதற்கு முன் வந்த அதி முக மாமன்ற உறுப்பினர்கள் அவர்க ளுக்கு ஒதுக்கிய இருக்கையில் அமராமல் திமுக, காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து இருந்தனர். மேயர், ஆணையாளர் வருகை தர சற்று தாமதாமான நிலையில், இருக்கை ஒதுக்கீடு இன்றி திமுக, காங்கிரஸ், சிபிஎம் மாமன்ற உறுப்பினர்கள் அதிமுக உறுப்பினர்களிடம் இது தங்களுக்கு ஒதுக்கிய இருக்கை நீங்கள் உங்களுடைய இருக்கையில் அமருங்கள் என்று கூறியதற்கு அவர்கள் தாங்கள் எழுந்திரிக்க முடியாது. எதிர்க்கட்சிக் என்று தனியாக இருக்க வேண்டும் அது ஒதுக்கினால் தான் நாங்கள் அனைவரும் எழுந்திருப்போம் என்று கூறினார்கள். இதனை தொடர்ந்து திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டத்திற்கு இடையூறாக இருக்கும் அதிமுக மாமன்ற உறுப்பினர்களை வெளியேறச் சொல்லி கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதனைத் தொடர்ந்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மேயரை சந்தித்து முறையிடுவதற்காக மேயர் இந்திராணி பொன்வசந்த்தை சந்தித்து முறையிட அவரது அறைக்கு சென்றுள்ளனர். அப்போது அதனை செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை, மேயர் அறை முன்பாக இருந்த திமுக கரை வேட்டி கட்டியிருந்த மேயரின் ஆதரவாளர்கள் சிலர், திடீரென செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி, கேமிராவை உடைத்துள்ளனர். இதனையடுத்து மேயர் ஆதரவாளர்களின் அராஜக போக்கை கண்டித்து செய்தியாளர்கள் மேயர் அறை முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேயர் அறை அவருடைய ஆதரவாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என கூறப்படுகிறது. எந்த பிரச்சனைக்கும் மேயரை சந்திக்க முடிவதே இல்லை என செய்தியாளர்கள் தரப்பில் கூறப்படுவதுடன், மாமன்ற கூட்ட அரங்கின் மேல் தளத்தில், செய்தியாளர்களுக்கு, இருக்கை ஒதுக்கப்பட்ட இடங்களில்கூட ஆளும்கட்சி மாமன்ற உறுப்பினர்களின் ஆதரவாளர்கள், உறவினர்கள் வந்து அமர்ந்து விடுகிறார்கள். எனவே,செய்தியாளர்கள் முழுமையாக செய்தியை சேகரிக்க முடிவதில்லை. மாநகராட்சி நிர்வாகம் புகைப்படங்கள் கீழே எடுப்பதற்கு மட்டும் தான் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி என்று கூறுகிறது. ஆனால் மாமன்ற உறுப்பினர்களின் ஆதரவாளர்கள், மன்ற கூட்டம் நடக்கும் போது, உள்ளே நுழைந்து அவர்கள்விருப்பம் போல் வீடியோ புகைப்படம் எடுக்கிறார்கள் எனவும்,ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளால், இவர்களை கட்டுப் படுத்த முடியவில்லை. என்று பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் புகார் தெரிவிக்கின்றனர். எனவே தமிழகஅரசு இப்பிரச்சினையில் தலையிட்டு, பத்திரிகையாளர்களை தாக்கிய ஆளும் கட்சியினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்வதுடன், பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்க வழக்கம் போல் தரைத்தளத்தில் மாமன்ற கூடத்திலேயே இருக்கைகளை ஒதுக்கித்தர மேயர் மூலம் ஆணையருக்கு அறிவுறுத்த வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.