districts

img

இயந்திர கோளாறால் துபாய் விமானம் ரத்து

சென்னை,மே 9- சென்னையில் இருந்து துபாய் செல்ல வேண்டிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணி கள் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு  காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டது. விமானம் ஓடுபாதையில் ஓடத்தொடங்கு வதற்கு முன்னதாக, விமானி இயந்திர கோளாறை கண்டுபிடித்ததால், அசம்பாவித  சம்பவம் தவிர்க்கப்பட்டு, 362 பயணிகள், 14 விமான ஊழியர்கள் உட்பட, 376 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். சென்னையில் இருந்து துபாய் செல்லும்  எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்,  புதன் இரவு 10:30 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்ல வேண்டும். வழக்கமாக அந்த விமானம், இரவு 8.30  மணிக்கு, துபாயி லிருந்து வந்துவிட்டு, மீண்டும் சென்னையில் இருந்து துபாய்க்கு, புறப்பட்டு செல்லும்.   இந்த விமானத்தில் சென்னையில் இருந்து துபாய் செல்வதற்காக 362 பயணிகள் இருந்தனர். அவர்கள் அனைவரும் இரவு  8  மணிக்கு முன்னதாக சென்னை சர்வதேச  விமான நிலையத்திற்கு வந்து, அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, துபாயி லிருந்து விமானம் சென்னை வந்ததும், விமானத்தில் ஏறி அமர்ந்து விட்டனர். இரவு 10:30 மணிக்கு விமானம் ஓடுபாதை யில் ஓட தயாரானது. அதற்கு முன்னதாக விமானி, விமானத்தின் இயந்திரங்களை சரிபார்த்தார். அப்போது விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. இந்த நிலையில் விமானத்தை இயக்கினால் பெரும் ஆபத்து என்பதை உணர்ந்த விமானி, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் தெரிவித்தார். இதை அடுத்து விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. விமான பொறியாளர்கள், விமானத்துக்குள் ஏறி,விமானத்தின் இயந்திரங்களை சரிபார்த்தனர். அதோடு விமானம் காலதாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நள்ளிரவை கடந்து விமா னத்தின் இயந்திரங்கள் சரி செய்ய முடிய வில்லை. இதை அடுத்து துபாய் செல்ல வேண்டிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணி கள் விமானம், ரத்து என்று அறிவிக்கப் பட்டது. பயணிகள் அனைவரும் விமானத் தில் இருந்து கீழே இறக்கப்பட்டு, சென்னை  நகரில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில்  தங்கவைத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள னர்.