districts

img

அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களில் நிரந்தர அடிப்படையில் ஓட்டுநர்

அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களில் நிரந்தர அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர் நியமிக்க வேண்டும், வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து கூடுதலாக்கும் தொழிற்சாலை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் உளுந்தூர்பேட்டை பணிமனை முன்பு செவ்வாயன்று (ஏப் 18)  மண்டலச் செயலாளர் வி.சாமிநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு கள்ளக்குறிச்சி மாவட்டச்  செயலாளர் எம்.செந்தில், பொருளாளர் ஏ.வீராசாமி, மண்டலப் பொருளாளர் கே.சுந்தரபாண்டியன், பணிமனைத் தலைவர் கே.திருமுருகன், செயலாளர் சி.சுப்பிரமணியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். அதே போல் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம் உள்ளிட்ட பணிமனைகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.