districts

மாதவரம், கொடுங்கையூர், பெரம்பூர் பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்னை,மே 22- மாதவரம் பால்பண்ணை சாலையில் மெட்ரோ ரயில் நிலைய பணிகளுக்காக புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து செல்லும் பிரதான குழாய்களை மாற்றி இணைக்கும் பணிகள்  ஞாயிறன்று  (மே 22)  தொடங்கியது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாதவரம் பால்பண்ணை சாலையில் மெட்ரோ ரயில் நிலைய பணிகளுக்காக புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து செல்லும் பிரதான குழாய்களை மாற்றி இணைக்கும் பணிகள் திங்கள் (மே23) முதல் 24ந்தேதி மாலை 4 மணி வரை மேற்கொள்ளப்படுகிறது. அதனால் மாதவரம் பகுதிக்கு உட்பட்ட விநாயகபுரம், பொன்னியம்மன் மேடு, கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, வியாசர்பாடி, பட்டேல் நகர், புதுவண்ணாரப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, பெரம்பூர், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட்டு 24ந்தேதி மாலை முதல் இந்த பகுதிகளுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும். மேலும் பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள பகுதி பொறியாளர்கள் எண். 8144930903, 8144930904, 8144 830906 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

;