விழுப்புரம்,மே.11- விழுப்புரம் நகராட்சி சார்பில் தென்பெண்ணை ஆற்றிலிருந்து குழாய்கள் பதித்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் வீடுகளுக்கு குடிநீர் விநியோக இணைப்பு வழங்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார். எஸ்.சி.எஸ்.டி. சிறப்பு நிதி ரூ.1.40 கோடியில் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்று வரும் குடிநீர் தொட்டி அமைக்கும் பணியை ஆட்சியர் ஆய்வு செய்தார்.