தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்கு கேட்டு விருகம்பாக்கம் பகுதி, 128வது வட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தனர். கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ச. லெனின், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ரெங்கசாமி, சி.செங்கல்வராயன், பகுதிக்குழு உறுப்பினர் ம. நீலமேகம், கிளைச் செயலாளர்கள் இரா. முருகன், அ. சுப்ரமணியன், ப. திருஞானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.