திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு சனிக்கிழமையன்று (ஏப்.6) மேற்கு தாம்பரம் பகுதியில் வாக்கு சேகரித்தார். வேட்பாளருக்கு கஸ்தூரிபாய் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.