districts

இரவில் உணவகங்களை மூட வற்புறுத்தக் கூடாது: காவலர்களுக்கு அறிவுரை

சென்னை, ஜூலை 13- இரவில் உணவகத்தை மூட காவலர் கள் வற்புறுத்தக் கூடாது என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947-ன்படி 10க்கும்  மேற்பட்ட ஊழியர்களை பணிய மர்த்திய கடைகள் மற்றும் வணிக நிறுவ னங்கள் 24 மணி நேரமும் அனைத்து நாள்களிலும் இயங்கலாம் என  மாநில அரசு ஆணை பிறப்பித்துள்ளது.  இதுகுறித்து சென்னை உயர்நீதி மன்றமும் சில வழிகாட்டு நெறிமுறை களை காவல்துறைக்கு ஏற்கெனவே வழங்கியுள்ளது. அரசு ஆணை மற்றும்  நீதிப் பேராணைகளை அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட் டுள்ளன. இருப்பினும் சில இடங்களில் காவல்  அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இரவில் இயங்கும் கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களை மூடுமாறு வற்புறுத்துவதாகப் புகார்கள் வந்துள்ளன.  எனவே, சட்ட விதிகளின்படி செயல் படும் வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவற்றின் வணிகச் செயல்பாடுகளில் குறிப்பாக  இரவு நேரங்களில் குறுக்கிடக் கூடாது என்றும், அதே வேளையில்  சட்ட விரோதச் செயல்களோ, தடை  செய்யப்பட்ட செயல்பாடோ கண்டறி யப்பட்டால் சட்டப்படி அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கலாம் என வும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.