திருக்கோவிலூர், மார்ச் 20 - திருக்கோவலூர் முழு நேர நூலகத்தில் டிஎன்பி எஸ்சி குரூப் 2 / 2ஏ மாதிரி போட்டித் தேர்வு தொடக்க விழா ஞாயிறன்று (மார்ச் 20) நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் திருக்கோவ லூர் முழு நேர நூலகம், திரு க்கோவிலூர் வாசகர் வட்டம் மற்றும் பாளையங்கோட்டை சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து இந்த நிகழ்வை நடத்தின. இந்நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டக்குழுத் தலைவர் கவி மாமணி சிங்கார உதியன் தலைமை தாங்கினார். நூலகர் மு.அன்பழகன் வர வேற்றார். திருக்கோவிலூர் நகர்மன்றத் தலைவர் டி.என்.முருகன் மாணவர்களுக்கு எழுதுபொருள் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நகர்மன்ற உறுப்பினர் கலையரசி தங்கராஜ் வினாத் தாள்களை வழங்கினார். சமூக சேவகர் எல்.தங்க ராஜ், நாடொப் பனசெய் அ.கதிர்வேல், அபூர்வா அகாடமி நிர்வாகி முருகன், முன்னாள் ராணுவ வீரர் கு.கல்யாணகுமார், மருத்து வர் ந.தியாகராஜன், மாவட்ட நலக் கல்வி அலுவலர் ப. அன்பு நிலவன் உள்ளிட் டோர் பேசினர். நூலகர் மு.சாந்தி நன்றி கூறினார்.