விழுப்புரம், மார்ச் 19- விழுப்புரம் அருகே தலித் மூதாட்டியிடம் விவ சாய நிலத்தை அபகரிக்க அடாவடித்தனம் செய்த திமுக ஒன்றியச் செயலாளர் மீது எஸ்சி, எஸ்டி பிரிவின் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலி யுறுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ப.வில்லியனூர் ஊராட்சிக்குட்பட்ட கள்ளி குளம் ஆதிதிராவிடர் பகுதியைச் சேர்ந்தவர் காத்தவராயன் மனைவி அஞ்சலை (78). இவருக்கு அந்த பகுதியில் சுமார் 1 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தை அபகரிக்க முயற்சி செய்த கண்டமங்கலம் திமுக ஒன்றியச் செயலாளர் வி.ஜி.பிரபாகரன், அந்த மூதாட்டியை அடித்து மிரட்டியும், சாதி பெயரை இழிவாக கூறி தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அஞ்சலையை அங்கிருந்த வர்கள் மீட்டு முண்டியம் பாக்கம் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனை யில் அனுமதித்தனர். சிகிச்சை முடிந்த நிலை யில் ஞாயிறன்று (மார்ச் 19) வீட்டுக்கு வந்த அந்த மூதாட்டிக்கு, சிறிது நேரத்தில் மீண்டும் உடல் நிலை பாதிப்பால் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கம் இருந்தவர்கள் உடனடி யாக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவலை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிர மணியன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத் தலை வர் இ.சங்கர், மாவட்டச் செயலாளர் ஏ.கண்ண தாசன், தலைவர் ஏ.சங்கரன், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் முதலிவீரன், எஸ்.விஸ்வநாதன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.தாண்டவராயன் ஆகி யோர் அஞ்சாலையை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், நடந்த சம்பவங்கள் குறித்தும் கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர் களை சந்தித்த இ.சங்கர், “மூதாட்டி அஞ்சலை மீது தாக்குதல் நடத்திய திமுக நிர்வாகி மீது எஸ்சி, எஸ்டி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும். இல்லை யென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார்.