திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., கொடியேற்றி மாநாட்டை துவக்கி வைத்தார். இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மூத்த நிர்வாகிகள் துரை முருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்பட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். (செய்தி : 6)