மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி தொடக்கம்
கடலூர், ஜூன் 15- கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி, அண்ணா விளை யாட்டு மைதானத்தில் தொடங்கியது. இதன் தொடக்கவிழாவுக்கு மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ் குமார் போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் கடலூர், நெல்லிக் குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், விருத்தாச்சலம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள 16 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த போட்டிகள் அனைத்தும் நாக்-அவுட் முறையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டிகள் 8.30 மணிக்கும், மதியம் 12.30 மணிக்கு நடைபெறுகிறது. இறுதி போட்டி வருகிற 22ம் தேதி நடைபெறுகிறது. போட்டிகளுக் கான ஏற்பாடுகளை கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் கூத்தரசன் செய்துள்ளார்.
அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை நீட்டிப்பு
சிதம்பரம், ஜூன் 15- அண்ணாமலைப்பல் கலை கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகா சம் நீடிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலைப் பல்கலைக்கழக 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான B.F.Sc., B.Voc.,M.A., M.S.W., M.Sc., M.Com., B.Ed., M.Ed., B.P.E.S., B.P.E.d., M.P.Ed., B.Sc. Sports Science, M.B.A., M.C.A., M.Lib.Sci., Diploma / PG Diploma படிப்புகள், Pharmacy படிப்புகள், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்புகள் (Integrated), அனைத்து கடல் அறிவியல் படிப்புகள், மற்றும் இசைத் துறை படிப்புகள் உள்ளன.
இந்த படிப்புகளில் சேர ஆன்லைன் வழியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப் பிக்க ஜுன் 30 மாலை 5.30 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள்ளது. மேலும் விவரங்களுக்கு www.annamalaiuniver sity.ac.in என்ற பல்கலைக் கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என பல்கலைக்கழக நிர்வா கம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
வங்கி மேலாளர் வீட்டில் திருட்டு
கிருஷ்ணகிரி, ஜூன் 15- ஒசூர் வங்கி மேலாளர் வீட்டில் 36 சவரன் நகைகளை கொள்ளையடித்தவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
ஓசூர் பிருந்தாவன் நகர்முதல் குறுக்குத் தெரு வைச் சேர்ந்த அன்பழகன் வங்கி ஒன்றில் முதன்மை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 11-ஆம் தேதி தனது குடும்பத்தினர் வீட்டில்தூங்கிக் கொண்டி ருந்தபோது திருடர்கள் ஜன்னல்கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவிலிருந்த 36சவரன் தங்கநகைகளை கொள்ளை யடித்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து புகாரின் பேரில், அட்கோ காவல் ஆய்வாளா்முத்தமிழ்ச்செல்வன்,கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கை ரேகைகளைப்பதிவு செய்து இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.