அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட மாநாடு ஜூலை 9, 10 தேதிகளில் சைதாப்பேட்டையில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் ஒருபகுதியாக சைதாப்பேட்டையில் மாவட்டத் தலைவர் எஸ்.சரவணசெல்வி தலைமையில் பேரணி நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலச் செயாளர் எஸ்.கே.பொன்னுத்தாய், மாவட்டச் செயலாளர் ம.சித்ரகலா, பொருளாளர் ஜெ.ஜூலியட், வரவேற்பு குழுச் செயலாளர் வி.கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.