திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் அரசு பள்ளி,அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் கடந்த 2022-23 ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பயின்று தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு தேவையான சான்றிதழ்கள் பெறுவதற்காக நடைபெற்ற சிறப்பு முகாமில் முதல் பட்டதாரி சான்று, சாதி, வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ்களை வட்டாட்சியர் செல்வகுமார் மாணவர்களுக்கு வழங்கினார்.