சென்னை, நவ. 29- திருவொற்றியூர் மண்ட லம் 4ஆவது வார்டில் மழைநீர் தேங்கி இருக்கும் பகுதிகளை வடக்கு வட்டார ஆணையர் கட்டா தேஜா ரவி, மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது மாமன்ற உறுப்பினர் ஆணையரிடம் கூறுகையில், எண்ணூர் அனல் மின் நிலைய பகுதி யில் இருந்து மழைநீர் மேட்டுத்தெருவுக்குள் வரு கிறது. எனவே அதை தடுக்க மின்சார வாரியம் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். பஜனைக் கோவில் தெருவில் கட்டப் பட்டிருக்கும் மழைநீர் கால்வாயை திருவீதி அம்மன் நகர் 5ஆவது தெரு மழைநீர் கால்வாயுடன் இணைக்க வேண்டும். மழைநீர் கால்வாய் கட்டும் சக்தி கட்டுமான நிறுவனம் பணியை மிகவும் தாமத மாக செய்கிறார்கள். அவர்களிடம் போதுமான ஆட்கள் இல்லை. எனவே அந்த பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்த வேண்டும். மேட்டுத்தெரு மிகவும் தாழ்வான பகுதியாக உள்ள தால், மழைநீர் கால்வாய் தனி யாக அமைத்து, அங்கு மழை நீர் சேகரிப்பு கிணறு அமைத்து அதில் மின் மோட்டார் பொருத்தி மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேட்டுத் தெருவில் தனி யாக மழைநீர் கால்வாய் அமைத்து, கிணற்றில் சேகரித்து வெளியேற்ற திட்ட மதிப்பீடு செய்ய அதிகாரிகளிடம் தெரி வித்த ஆணையர், ஒப்பந்த தாரரிடம் பணிகளை விரைந்து முடிக்க அறி வுறுத்தப்படும் என்றும் தெரிவித்தார். ஆய்வின் போது மண்டல அலுவலர் புரு ஷோத்துமன், செயற்பொறி யாளர் பாபு, உதவி பொறி யாளர் சஞ்சீவி ராவ் ஆகி யோர் உடனிருந்தனர்.