சிதம்பரத்தில் ராமசாமி நகர மேல்நிலைப் பள்ளியில் சிதம்பரம் நகராட்சி பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 33 வார்டுகளிலும் வாக்குகளை பதிவு செய்த வாக்கு பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இதனை வரும் 22-ந்தேதி எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். இவருடன் தேர்தல் நடத்தும் அலுவலர் அஜிதா பர்வின், காவல்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.