districts

img

வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை  வசதிகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

சிதம்பரத்தில் ராமசாமி நகர மேல்நிலைப் பள்ளியில் சிதம்பரம் நகராட்சி பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 33 வார்டுகளிலும்  வாக்குகளை பதிவு செய்த வாக்கு பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இதனை வரும் 22-ந்தேதி எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை  வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். இவருடன் தேர்தல் நடத்தும் அலுவலர் அஜிதா பர்வின், காவல்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.