மருத்துவ காப்பீடு திட்ட குளறுபடிகளை கலைந்து காசில்லா மருத்துவத்தை உறுதி செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பச்சையப்பன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பார்த்திபன், மாநில செயலாளர் சி. சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் ஆனந்தன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.