சென்னை, நவ. 2- தீபாவளியன்று பெரும் பாலான வீடுகளில் பட்டாசு வெடிக்கப்பட்டது. இதனால் பட்டாசு குப்பைகள் தெருக்களில் குவிந்தது. இவற்றை மாநகராட்சி துப்புரவு தொழி லாளர்கள் தொடர்ந்து அகற்றி வருகின்றனர். திரு வொற்றியூர், மணலி மற்றும் மாதவரம் மண்டலங்களில் குடியிருப்பு பகுதிகளில், சாலைகளில் பட்டாசு கழிவு கள் பெருமளவில் தேங்கி யது. இதையடுத்து மாநக ராட்சி தூய்மை பணி யாளர்கள், பட்டாசு கழிவு களை அப்புறப்படுத்தி வரு கின்றனர். ஒரே நேரத்தில் பட்டாசு கழிவுகள் சேர்ந்ததால் மாநகராட்சி அதிகாரிகள் கூடுதலாக தூய்மைப் பணி யாளர்களை நியமித்து இரவு நேரத்திலும் தூய்மை பணிகளை மேற்கொண்டார் அதன்படி, திருவொற்றி யூரில் 11.2 டன், மணலி யில் 5 டன், மாதவரத்தில் 9.75 டன் என சுமார் 26 டன் பட்டாசு கழிவுகள் சேகரிக்கப்பட்டு கும்மிடிப் பூண்டி பகுதியில் உள்ள எரியூட்டு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.