districts

img

தேர்வுக்கு தயாராகும் குழந்தைகளுடன் கலந்துரையாடல்

சென்னை, ஜன. 23- அண்ணா நகர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தேர்வுக்கு தயாராகும்  (பரிக்சா பே  சர்ச்சா) கலந்துரையாடல் நிகழ்ச்சி நடை பெற்றது. மாணவர்களை ஆண்டு தேர்வுகளுக்கு தயார் படுத்துவதற்கும், மன அழுத்தம் இல்லாத சூழலை உருவாக்குவதற்கும் பிரதமர் நரேந்திர மோடி வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு ஆண்டும் பரிக்சா பே சர்ச்சா நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாளான ஜனவரி 23அன்று துணிச்சல் (பராக்ராம் திவாஸ்)  நாளாக கொண்டா டப்பட்டது. இதையொட்டி அண்ணா நகர் பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 8ஆவது பரிக்சா பே சர்ச்சா நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் நிர்மலேந்த் கர் தலைமையில் வியா ழனன்று (ஜன. 23) நடைபெற்றது. இதில் 6 பள்ளிகளை சேர்ந்த சுமார் நூறு மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்ட னர். இதையொட்டி வினாடி வினா போட்டி யும் நடைபெற்றது.