விழுப்புரம்,ஆக.3-
விழுப்புரம் மாவட்டம், கெடார் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகள் கடன் கேட்டு வருகின்றனர். ஆனால் நிர்வாகம் கடன் வழங்காமல் அலைக்கழிப்பு செய்து வந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வங்கி முற்றுகை போராட்டத்தை அறி வித்தது.
விழுப்பு ரம் வட்டாட்சியர் புதனன்று சங்கத்தின் மாநில துணைத் தலைவர் வி.ராதாகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் பி.முருகன், மாவட்ட துணைச் செயலாளர் கே. முத்துவேல் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி னார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக மாற்றுத்திற னாளிகளுக்கு கடன் வழங்காதது வருத்தம் அளிக்கிறது. கடன் கேட்டு மனு கொடுத்து மாற்றுத் திறனாளிகளுக்கு வரும் 9ஆம் தேதிக்குள் கடன் தரு வதாக உறுதியளித்தனர். இதனால், ஆக. 3அன்று நடைபெறுவதாக இருந்த முற்றுகை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்.