districts

img

மாற்றுத்திறனாளிகள் சங்க ராணிப்பேட்டை மாவட்டக்குழு உதயம்

ராணிப்பேட்டை, ஆக. 17 -  ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில்  அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கத்தின் பேரவை கூட்டம் ஒன்றிய அமைப்பாளர் தேவி தலைமை யில் சனிக்கிழமை (ஆக. 17) நடைபெற்றது. மாநிலத் தலைவர் தோ. வில்சன் கலந்து கொண்டு உரையாற்றினார். வேலூர் மாவட்ட தலைவர் கே. கோவிந்த ராஜ், செயலாளர் கே.ஜெ. சீனிவாசன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆ.தவராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி. ரகுபதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இந்த கூட்டத்தில் 13 பேர் கொண்ட ராணிப்பேட்டை மாவட்ட அமைப்புக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்ட அமைப்பாளர் எஸ். ஏகாம்பரம், துணை ஒருங்கிணைப்பாளராக பி. வெங்கடேசன் தேர்வு செய்யப்பட்டனர்.