districts

வளர்ச்சி பணிகள் கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி, ஜூன் 17-

     தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றும் வளர்ச்சி பணிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சி யர ஷ்ரவன்குமார் ஆய்வு செய்தார்.

    தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விளக்க வூர் ஊராட்சி புதுக்காலனி பகுதியில் 15 வது நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் சமையற்கூடம் ரூ. லட்சத்தில் புணரமைக்கப்படு கிறது.

    அதேபோல், வடக்கு தெருவில் ரூ.3.48 லட்சம் மதிப்பீட்டில்  வடிகால் வசதி யுடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டுமானப் பணியின் நடை பெற்று வருகிறது. இந்த பணி களின் முன்னேற்றம் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.

   தொடர்ந்து வடபூண்டி ஊராட்சியில் பள்ளி உட்கட்ட மைப்பு நிதியின் கீழ் ரூ. 25.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறை கட்டி டங்களையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தின் கட்டு மான பணிகளையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

   அப்போது, பணிகளை விரைந்து முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு அறி வுறுத்தினார். ஆய்வின் போது தியாகதுருகம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள். ஒன்றிய பொறியாளர்கள்.பணி மேற்பார்வையாளர்கள் உடனி ருந்தனர்.