districts

img

ஓசூர் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆட்சியர் ஆய்வு

ஓசூர், ஆக.17-

      கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஒன்றியத்தில் உள்ள பேகேபள்ளி, நல்லூர் மற்றும் பாகலூர் ஊராட்சியில்   மக்கள் நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

     அப்போது, பேகேப் பள்ளி ஊராட்சியில் ஒரு பயனாளிக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்தில் கட்டப்பட்டு வரும் வீட்டு கட்டுமான பணி களையும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.1 கோடியே 1 லட்சத்தில் 6 வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணிகளையும் ஆய்வு செய்தவர்.

     மேலும், பள்ளியில் மாண வர்களின் ஆங்கில வாசிப்பு திறன் மற்றும் கணித வாய்ப் பாடு குறித்து கற்றல் திறனை  கேட்டறிந்தார்.  

     தொடர்ந்து நல்லூர் ஊராட்சியில் ரூ.8 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பில் கால்வாய் சீரமைக்கும் பணியையும் ஆய்வு செய்து, அங்குள்ள நடுநிலை பள்ளியில் மாண வர்களின் கற்றல் திறனை கேட்டறிந்தார்.  

    மேலும் அங்கன்வாடி மையத்தையும் ஆய்வு செய்து, அந்த பகுதியில் ரூ.38 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப் பட்டு வரும் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலை யத்தின் கட்டுமான பணி களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர்,  பாகலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்பில் அமைக் கப்பட்டு வரும் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கத் தில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அலு வலர்கள் பொறியாளர் களுக்கு அறிவுறுத்தினார்.