புதுச்சேரி,ஆக.16-
தொழிலாளர்கள் உரிமைகளைப் பறித்து வரும் மோடி அரசை தூக்கி எறிவோம் என்று சுதந்திர தின கலைவிழாவில் தொழிற்சங்க தலைவர்கள் சூளுரைத்தனர்.
சிஐடியு புதுச்சேரி மாநிலக்குழு,அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் இணைந்து சுதந்திர தின கலை விழா நடத்தின. தலை வர்கள் பிரபுராஜ், சங்கர், தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமை தாங்கினர். மனிதம் அமைப்பின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் களப்பிரன் ஆகியோர் உரையாற்றினர்.
விழாவில் பேசிய தலைவர்கள்,“ கடந்த 9 ஆண்டுகால பாஜக அரசு, பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக தொழிலாளர் உரிமை சட்டஙளை பறித்து வருவதால் வருகிற மக்களவை பொதுத் தேர்தலில் தூக்கி எறிவோம்” என்று சூளு ரைத்தனர்.
நிர்வாகிகள் சீனுவாசன், ராமமூர்த்தி, ரவிச்சந்திரன், கொளஞ்சி யப்பன், முருகையன், தட்சணாமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக புதுச்சேரி சப்தர்ஹஸ்மி கலைக்குழு மற்றும் புதுகை பூபாலம் கலைக் குழுவின் அரசியல் நையாண்டி நிகழ்ச்சி யும் நடைபெற்றது.