திருவள்ளூர், ஆக.9- கும்மிடிப்பூண்டியை அடுத்த வழுதலம்பேடு கிராமத்தில் எட்டி யம்மன் கோயிலில், பட்டியலின மக்கள் வழிபாடு நடத்த மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த வழு தலம்பேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற எட்டியம்மன் திருக் கோயில் உள்ளது. 1998 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோவில் அறநிலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடத்தி னார். அப்போது பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய அனு மதிக்கவில்லை. இதனால் இரு தரப்புக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து, வருவாய்த் துறை அதிகாரிகளால் கோவில் சீல் வைக்கப்பட்டது. 22 ஆண்டுகளுக்கு பிறகு, வெள்ளியன்று (ஆக 9), குட முழுக்கு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கோவில் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் பட்டியலின மக்களிடம் ஆலோசனை நடத்த வில்லை. இதைத் தொடர்ந்து, தாழ்த்தப்பட்ட சமூகம் என்ற காரணத்தால் தங்களை கோவிலுக்குள் அனுமதிக்க மாற்று சமூகத்தைச் சார்ந்தவர்கள் மறுப்பு தெரிவிப்பதாக பட்டியலின மக்கள் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சரவண குமாரியிடம் புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வியாழனன்று (ஆக.8), இரவு அவசர அவரசமாக சுமார் 12 மணிக்கு இரு தரப்பினரையும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து அமைதி பேச்சு நடத்தினர். அப்போது, குடமுழுக்கு விழாவிற்கு பட்டியலின மக்கள் கொடுக்கும் நன்கொடை மற்றும் பூஜை பொருட்கள் கோவில் நிர்வாகம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் குடமுழுக்கு முடிந்த பிறகு நடைபெறும் மண்டல பூசையில் பட்டியலின மக்களுக்கு ஒரு நாள் ஒதுக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. மேலும், பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்யவும் அனுமதிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, குட முழுக்கு நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடுகள் காவல்துறை யினர் பாதுகாப்புடன் நடந்தது. காவல்துறையின் பலத்த பாது காப்புடன் பட்டியலின மக்கள் பூஜை செய்ய கோவிலுக்குள் சென்ற போது மாற்று சமு தாயத்தைச் சேர்ந்த சிலர் கோவிலுக்கு செல்லும் வழி பட்டா நிலம் எனக்கூறி பட்டியலின மக்கள் கோவிலுக்குள் செல்ல விடாமல் வழி மறித்தனர். இதைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் மாற்று பாதை யில் அனுமதித்தனர். ஆனால் அந்த பாதையையும் மாற்று சமூகத்தினர் மறித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோவிலில் பூஜை செய்ய மறுக்கப்பட்ட பட்டியல் இன மக்கள் அங்கிருந்து வந்து ரெட்டம்பேடு - கும்மிடிப்பூண்டி சாலையில் வந்த அரசு பேருந்தை சிறைபிடித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பிறகு, போலீசார் சமரசம் செய்தனர். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு பொன்னேரி கோட்டாட்சி யர் வாகே சங்கேத் பல்வந்த் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் வந்தனர். அப்போது, பட்டியலின மக்கள் கோவிலுக்குள் செல்ல விடாமல் ஒரு பகுதியினர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் மீண்டும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பதட்டம் அதிகரித்தது. கோட்டாட்சியர் முன்னிலையில் கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த எட்டி யம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் வழிபட முடியாமல் போன தால் இரண்டாவது முறையாக அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர். களத்தில் சிபிஎம் தலைவர்கள் இந்த தகவலை அறிந்து, வழிபாடு மறுக்கப்பட்ட மக்கள் சிபிஎம் வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.சூரிய பிரகாஷ், வட்ட குழு உறுப்பினர்கள் டி.கோ பாலகிருஷ்ணன், எம்.சிவக்குமார் ஆகியோர் நேரில் சென்று விசாரித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோபால் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:- எட்டியம்மன் கோவில் அற நிலையத் துறைக்கு சொந்தமானது என்றாலும் பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய முடியவில்லை. அந்த மக்களை தடுத்து நிறுத்திய வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டியலின மக்கள் வழிபடும் உரிமையை எந்த சூழ்நிலையிலும் மறுக்க கூடாது. பட்டியலின மக்கள் கொடுக்கும் காணிக்கை கோவில் பூசாரி ஏற்றுக் கொள்ள வேண்டும். மண்டல பூஜையில் ஒரு நாள் பட்டியிலின சமூக மக்க ளுக்கு ஒதுக்க வேண்டும்.காவல்துறையினரின் பாதுகாப்பு வழிபாடு செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்படும் போது ஜனநாயக சக்திகள் ஆதரவு குரல் எழுப்ப வேண்டும், திருவிழா தொடர்பான அனைத்து முடிவுகளையும் ஏற்கெனவே சமாதான கூட்டத்தில் ஒப்புக்கொண்டபடி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தியுள்ளார்.